சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிய சத்திர சிகிச்சை கூடம் இன்று முதல் இயக்கம்

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட சத்திர சிகிச்சை கூடம் இன்று(27) முதல் இயங்க ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சத்திர சிகிச்சை நிபுணர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையிலான மருத்துவ குழுவும் புதிதாகப் பொறுப்பேற்ற மகப்பேற்று நிபுணர் சிறீசுபாஸ்கரன் தலைமையிலான மருத்துவ குழுவும் சத்திர சிகிச்சைகளை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, கேர்னியாவிற்கான சத்திர சிகிச்சை, 2 சீசேரியன் சத்திரசிகிச்சை மற்றும் 4 சிறு சத்திர சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன.