100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான மழை!

நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவிலான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்றும் வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.