சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு : வெளியான அறிவிப்பு

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு : வெளியான அறிவிப்பு

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளரான சனத் ஜயசூரியவின் (Sanath Jayasuriya) பதவிக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கிரிக்கட் அறிவித்துள்ளது.

அதற்கமைய, சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்பட்டுவந்த கிரிஸ் சில்வர்வூட் (Chris Silverwood) ஐசிசி T20 உலகக்கிண்ணத்துடன் தலைமை பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஜூலை 07ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் (SLC) ஆடவர் தேசிய அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக சனத் ஜயசூரிய நியமிக்கப்பட்டார்.
இந்தநிலையில் அவருடைய பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும், சனத் ஜயசூரியவின் தலைமை பயிற்றுவிப்பின் கீழ் இலங்கை அணி இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியதோடு, இங்கிலாந்து (England) மண்ணில் டெஸ்ட் போட்டியொன்றிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.