இலங்கையில் இன்று முதல் ஆரம்பமாகவுள்ள புதிய சனத்தொகை கணக்கெடுப்பு பணிகள்

இலங்கையில் புதிய சனத்தொகை கணக்கெடுப்புக்கான தகவல் சேகரிப்பு பணிகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கையின் 15ஆவது சனத்தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பில் தனிநபர் மற்றும் வீட்டுத் தகவல் சேகரிப்பு நடவடிக்கை இன்று (07.10.2024) ஆரம்பமாகவுள்ளது.

இதன்படி சனத்தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் வீடுகளுக்கு சென்று பார்வையிடவுள்ளதாக சனத்தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா சேனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.


2012 மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், சமீபத்திய பட்டியல்கள் வீட்டு அலகுகளில் 24 சதவீத அதிகரிப்பைக் காட்டுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
10 வருடத்துக்கு ஒருமுறை இந்த சனத்தொகை கணக்கெடுப்பானது முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.