நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

நாட்டில் கொட்டித் தீர்க்க போகும் மழை: மக்களுக்கு வெளியான எச்சரிக்கை

நாட்டில் மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் (Department of Meteorology) இன்று (14.10.2024) வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.

காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதேவேளை, கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலேயே பெருமளவானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

குறித்த இரு மாவட்டங்களில் மாத்திரம் ஒரு இலட்சத்து 9 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சில கல்வி வலயங்களில் உள்ள பாடசாலைகளை இன்றும் (14) நாளையும் (15) மூடுவதற்கு கல்வி அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு (colombo) கல்வி வலயத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இன்று மாத்திரம் மூடப்படும் என மேல் மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.