வரலாற்றில் முதல் தடவையாக பெருந்தொகை வருமானத்தைப் பதிவு செய்துள்ள சுங்கத்திணைக்களம்

வரலாற்றில் முதல் தடவையாக பெருந்தொகை வருமானத்தைப் பதிவு செய்துள்ள சுங்கத்திணைக்களம்

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு ட்ரில்லியன் ரூபா வருமானத்தைப் பதிவு செய்துள்ளதாக சுங்கப் பணிப்பாளர் நாயகம் சரத் நோனிஸ் குறிப்பிட்டுள்ளார்.சுங்கத் தலைமையகத்தில் நேற்று (10ஆம் திகதி) காலை நடைபெற்ற வைபவத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் செப்டம்பர் 6 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில் சுங்கத்துறை இந்த சாதனை வருவாயை வசூலித்துள்ளது. இதற்கு முன்னர், ஒரு வருடத்தில் சுங்கத்தால் பெறப்பட்ட அதிக வருமானம் 975 பில்லியன் ரூபாவாகும், அதே வருமானம் அதற்கு முந்தைய ஆண்டு 2023 இல் பதிவு செய்யப்பட்டது.

வரலாற்றில் முதல் தடவையாக ஒரு ட்ரில்லியன் ரூபா வருமானம் பதிவாகும் வகையில் அதிகாரிகள் தமது செயற்பாடுகளை சுயாதீனமாக முன்னெடுப்பதற்கு தேவையான பின்னணியை அரசியல் அதிகார சபை உருவாக்கியுள்ளமையே பிரதான காரணம் என சுங்கப் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.