பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிகரிப்பு

பொருட்களின் விலைகளில் ஏற்படவுள்ள அதிகரிப்பு

நாட்டில் பணவீக்கம் படிப்படியாக குறைந்து வருவதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

இது மிகவும் நல்லதொரு நிலை என அவர் குறிப்பிட்டுள்ளார். பணவீக்கம் தற்போது கட்டுக்குள் உள்ளது. தற்போது நாட்டில் பணவீக்கம் 02 முதல் 03 சதவீதம் என்ற நிலைமையில் உள்ளது. ஆனால் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் மேலும் குறையும் என்று எதிர்பார்க்க முடியாது.

மேலும் ஒவ்வொரு மாதமும் பொருட்களின் விலைகளில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்படுவதற்கே அதிக வாய்ப்புகள் உள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.