டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 39,137 பேர் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதிகளவான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி மேல் மாகாணத்தில் 16, 463 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்தப்பிரிவு தெரிவித்துள்ளது.