மிருகக் காட்சிசாலையில் பல நிகழ்வுகள் ஏற்பாடு

மிருகக் காட்சிசாலையில் பல நிகழ்வுகள் ஏற்பாடு

சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் சிறுவர்களுக்கான பல நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, மிருகக் காட்சிசாலையின் நடவடிக்கை பிரிவு பணிப்பாளர் திருமதி அனோமா பிரியதர்ஷனி தெரிவித்துள்ளார்.

ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு, தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம்; மற்றும் ஹம்பாந்தோட்டை சபாரி பூங்கா ஆகியவற்றை இலவசமாக பார்வையிட வசதிகள் செய்யப்பட்டுள்ளன .
இயற்கை வளங்களை பாதுகாத்தல், மனோபாவங்களை மேம்படுத்துதல், திறன் அபிவிருத்தி போன்ற நிகழ்ச்சிகள் தெஹிவளை மிருகக்காட்சிசாலை வளாகத்தில் நடைபெற உள்ளன.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் வருடாவருடம் சர்வதேச சிறுவர் தின கொண்டாட்டம் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.