பெரியநீலாவணை மீனவர்கள் வலையில் சிக்கிய சிவலிங்கம்!

பெரியநீலாவணை மீனவர்கள் வலையில் சிக்கிய சிவலிங்கம்!

அம்பாறை – பெரியநீலாவணையில் மீனவர்கள் வலையில் எதிர்பாராத விதமாக சிவலிங்கம் ஒன்று சிக்கியுள்ள சம்பவம் புதன்கிழமை (04) இடம்பெற்றுள்ளது.

மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்த போது வலையில் எதிர்பாராத விதமாக சிவலிங்கம் சிக்கியதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த சிவலிங்கம் மீனவர்களால் அதே பகுதியில் பொருத்தமான மரத்தடியில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மக்களால் வழிபடப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.