மிகவும் வேகமாக பூமியை நோக்கி வரும் ராட்சத சிறுகோள்

மிகவும் வேகமாக பூமியை நோக்கி வரும் ராட்சத சிறுகோள்

தற்போது பூமியை நோக்கி ஒரு சிறுகோள் வேகமாக வருகின்றது என நாசாவினால் தகவல் வெளியாகி உள்ளது. இதன் முழு விபரம் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது பூமியை நோக்கி 2024 ON என்ற சிறுகோள் அதிவேகமாக வந்து கொண்டிருக்கிறது என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. இது 720 அடி விட்டம் கொண்ட இந்த பெரிய சிறுகோள் எனவும் இந்த அளவு இரண்டு கிரிக்கெட் மைதானங்களை விட பெரியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த  விண்வெளி பாறை வரும் 15ஆம் தேதி அன்று பூமிக்கு அருகில் வர உள்ளது.  இந்த சிறுகோள் சுமார் 620,000 மைல்கள் அல்லது தோராயமாக 2.6 மடங்கு பாதுகாப்பான தூரத்தை பராமரிக்கும் என கூறப்பட்டு உள்ளது. இது பயணிக்கும்  25,000 மைல் வேகமானது வானியலாளர்கள் மற்றும் விண்வெளி ஆர்வலர்களை ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது நாசாவின் பூமிக்கு அருகில் உள்ள பொருள் கண்காணிப்பு திட்டத்தின் மூலம் முதலில் அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த  2024 ON எனும் சிறுகோள் இதன் அளவு மற்றும் விரைவான வேகம் காரணமாக கவனத்தை ஈர்த்துள்ளது.

கலிபோர்னியாவின் பசடேனாவில்(Pasadena) உள்ள ஜெட் ப்ராபல்ஷன் எனும் ஆய்வகம் (The Jet Propulsion Laboratory), மேம்பட்ட ரேடார் மற்றும் ஆப்டிகல் தொலைநோக்கி கருவிகளைப் பயன்படுத்தி சிறுகோளைக் கண்காணித்து வருகிறது.

இதன் மூலம் சிறுகோளின் அளவு, வடிவம் மற்றும் கலவை பற்றிய விரிவான பகுப்பாய்வுகள், ஏதேனும் சாத்தியமான அபாயங்களை மதிப்பிடுவதற்கும் உத்திகளை ஆராய்வதற்கும் நடத்தப்படுகின்றன.

ஆனால் இந்த சிறுகோள் வலிமையான வேகம் மற்றும் பெரிய அளவில் இருந்தாலும் இது பூமியுடன் மோதுவதற்கான பலம் குறைவாகவே உள்ளது. இருந்தாலும் நாசாவின் கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம் (PDCO)அனைவரையும் தொடர்ந்து விழிப்புடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.